Sat. May 4th, 2024

இலங்கையில் மேலும் ஒரு நபர் கொரோனா தொற்றுக்கு இலக்கு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரத்மலானை, ஸ்ரீ ஜன மாவத்தையில் வசித்து வரும் பெண்ணொருவரே கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் வசிக்கும் 34 பேர் பூனானை கொரோனா தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து 29 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளதோடுஇ வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்