Fri. May 3rd, 2024

கொடிகாமம் தனிமைப்படுத்தல் முகாமுக்கு  அழைத்து வரப்பட்ட 233 பேர் இன்று விடுவிப்பு

கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் அமைக்கப்பட்ட கோரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு
அழைத்து வரப்பட்ட 233 பேர் 5/4/2020 ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனர்

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்தவர்களை 6 பஸ் வண்டிகளில் அழைத்து வரப்பட்டு கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் கொரோனா தனிமைப்படுத்தல் கண்காணிக்கும் நிலையத்தில்
பரிசோதனைகளை மேற்கொண்டு 14 நாட்களின் பின்னர் கொரோணா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டு 233 பேர் இன்றையதினம் (5/4) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு வந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்  14 நாட்களின் பின்னர் இன்று தமது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்