Thu. May 2nd, 2024

இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

மின்னலடி ஜாக்கி விளையாட்டு கழகம் நடாத்தும் யாழ் மாவட்ட ஏ, பி பிரிவு அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் இன்று  ஞாயிற்றுக்கிழமை குறித்த கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெறவுள்ளது.
ஏ பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் ஆவரங்கால் மத்திய அணியை எதிர்த்து புத்தூர் கலைமதி அணியும்,
பி பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணியை எதிர்த்து சிறுப்பிட்டி கலைஒளி அணியும் மோதவுள்ளன.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை கரப்பந்தாட்ட சங்க நிர்வாக உறுப்பினரும், வடமாகாண கரப்பந்தாட்ட ஒருங்கிணைப்பாளருமான கி.மனோகரன், சிறப்பு விருந்தினராக தெல்லிப்பளை பொலீஸ் பெறுப்பதிகாரி எம்.ஏ.ஏ.சி.சுமணசேகர, கெளரவ விருந்தினர்களா தெல்லிப்பளை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் சி.சிவபாலன்,  யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்க உப தலைவரும் சர்வதேச கரப்பந்தாட்ட சங்க மத்தியஸ்தருமான ந.சுதேஸ்குமார் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்