Sun. Apr 28th, 2024

இரண்டாவது T20 ஐயும் வென்று தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து

இன்று பல்லேகலவில் இடம்பெற்ற இரண்டாவது T20 பகலிரவு ஆட்டத்திலும் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற நிலையில் வென்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்ததை அடுத்து, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது. இதில் நிரோஷான் திக்வெல்ல அதிகபட்சமாக 39 ஓடங்களையும் பெர்னாண்டோ 37 ஓடங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ரான்ஸ் 33 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சௌதி 18 ஓடங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடவந்த நியூஸிலாண்ட்து அணி 3.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. பின்னர் யோடி சேர்ந்த கிரான்ஹோமே மற்றும் ப்ருஸ் ஆகியோரின் இணைப்பாட்டத்தில் மீண்டெழுந்து நியூஸிலாந்து அணி 19.4 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓடங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது. இதன் மூலம் 3 ஆட்டங்களை கொண்ட T 20 தொடரில் 2-0 என்ற நிலையில் நியூஸிலாந்து அணி முன்னிலையில் உள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்