ஆண்களுக்கான எல்லே போட்டியில் சென்தோமஸ் அணி சம்பியன்
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லை போட்டியில் சென்தோமஸ் விளையாட்டு கழக அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டிகள் நேற்று சனிக்கிழமை அல்வாய் மனோகரா விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் சென்தோமஸ் அணியை எதிர்த்து வல்வை விளையாட்டு கழக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை அணி 14 இலக்குகளை இழந்து இரு ஓட்டங்களை பெற்றனர். அவ்வணி சார்பில் பிரணவன் மற்றும் பிரகலாதன் ஆகியோர் ஒவ்வொரு ஓட்டங்களை பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்தோமஸ் அணி மூன்று இலக்குகளை மாத்திரம் இழந்து 3 ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர். அவ்வணி சார்பில் டினோ இரு ஓட்டங்களையும் தினேஸ் ஒரு ஓட்டத்தையும் பெற்றனர்.