ஆசிரியர் கவிஞர்.நந்தினியின் “மருதம்” எனும் சிறுவர்களுக்கான கதைப்பாடல் நூல் வெளியீடு
ஆசிரியர் கவிஞர்.நந்தினியின் “மருதம்” எனும் சிறுவர்களுக்கான கதைப்பாடல் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை யா/சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில்
நடைபெற்றது.
யா/மிருசுவில் அ.த.க பாடசாலை அதிபர் திருமதி வளர்மதி கபிரியேல்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சோ.திருக்குமரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் அதிபர் ந.சர்வேஸ்வரன், தென்மராட்சி செயற்பட்டு மகிழ்வோம் இணைப்பாளர் திருமதி.இராசலட்சுமி மயில்வாகனசிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக சாவகச்சேரி முன்பள்ளிகளின் கோட்ட இணைப்பாளர் திருமதி. செந்தூரன் ஆனந்தியும் கலந்துகொணாடனர். நூலின் முதற்பிரதியை தேசிய சேமிப்பு வங்கியின் அச்சுவேலிக்கிளை நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர் திருமதி.அம்பிகா ஆதவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்நூலின் நயப்புரையை அதிபர் ந.சர்வேஸ்வரன் அவர்கள் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.