ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு வலய ஆசிரிய ஆலோசகர் சங்கம் நடாத்தும் வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 8.30 மணிமுதல் புதுக்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் சங்கத்தின் தலைவர் அ.அமலேஸ்வரன் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வவுனியா வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட பயிற்றுநர் தே.அமலன் கெளரவ விருந்தினராக சுசீலன் பவுண்டேஷன் இலங்கை தலைவர் ஏ.பரமேஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்னர்.