அவுஸ்திரேலியா வாசி 33 ஆவது மாடியில் இருந்து விழுந்து சாவு!! -கொழும்பில் உள்ள ஹோட்டலில் சம்பவம்-
கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 33 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியா நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த 52 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தவர் என்று கொம்பனித்தெரு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் பாதுகாப்பின் கீழ் உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த மரணத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.