Sat. Apr 27th, 2024

அலெக்சனின் அபார ஆட்டத்தால் சம்பியனாகியது இமையாணன் மத்தி

வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய கால்பந்தாட்ட தொடரில் இமையாணன் மத்தி அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் இமையாணன் மத்தி அணியை எதிர்த்து வல்வை ஆதிசக்தி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பமாகி 3வது நிமிடத்திலேயே வல்வை ஆதிசக்தி அணி வீரர் ஒரு கோலைப் போட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.  ஆனால் சற்றும் சளைக்காமல் போராடிய இமையாணன் மத்தி அணியினர்,  சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர். அடுத்த 6வது மற்றும் 7வது நிமிடங்களில் இமையாணன் மத்தி அணி வீரர் அலெக்சன் அடுத்தடுத்து இரு கோல்களைப் போட்டு அசத்த முதல் பாதியாட்டத்தில் இமையாணன் மத்தி அணி 2:1என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாட இரு அணிகளாலும் மேலதிக கோல் எதனையும் பெற முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் இமையாணன் மத்தி அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர். ஆட்ட நாயகன் மற்றும் தொடராட்ட நாயகனாக இமையாணன் மத்தி அணி வீரர் அலெக்சன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்