Sun. May 12th, 2024

அறம் அறக்கட்டளையின் முன்மாதிரியான செயற்பாடு

அறம் அறக்கட்டளையின் பிரதான அனுசரணையில் அமரர் சிற்றம்பலம் மகாலிங்கம் ஞாபகார்த்தமாக தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வும், கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் கரவெட்டி மகேசன் விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைைபெற்றது.
நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக அறம் அறக்கட்டளை இயக்குநர் மதன் மகாலிங்கம்,  செயற்றிட்ட இணைப்பாளர் குணேஸ் விஜயரட்ணம்  மற்றும் இளையதம்பி இராகவன் ஆகியோரும் கெளரவ விருந்தினராக வ.கணேசமூர்த்தி,  அவுஸ்ரேலிய தமிழ் fm வானொலி அறிவிப்பாளர் திருமதி சௌந்தரி கணேசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
கிரிக்கெட் தொடரில் கரவெட்டி
ஞானம்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தையும், அண்ணாசிலையடி விளையாட்டுக் கழகம் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு அறம் அறக்கட்டளையூடாக கரவெட்டி இளைஞர் ஒன்றியத்திற்கும் மகேசன் விளையாட்டுக்கழகத்திற்கும் சீருடை மற்றும் கழக இலட்சிணை பொறிக்கப்பட்ட கொடிகள் பரிசளிக்கப்பட்டதுடன் நிகழ்விற்கான மேடை மற்றும் பீடம் ஆடுகள மைதான புனரமைப்பு போன்றவற்றிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிறுவர் மகிழ் முற்றம் அமைக்கும் செயற்றிட்டம் இடம்பெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்