அனுமதியின்றி மாடு கொண்டு சென்றவர்கள் கைது
வடமராட்சி துன்னாலை ஆயச்சந்தி பகுதியில் அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட மாடுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துன்னாலையிலிருந்து முள்ளி வீதிக்கு செல்லும் ஆயச்சந்தி பகுதியில் அனுமதியின்றி 3 பசு மாடுகளும், ஒரு ஆண் மாடும் உட்பட 4 மாடுகளை பற்றைக்குள் மறைக்க முற்பட்ட போது, சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்துள்ளதுடன், 4 மாடுகளையும் தமது பராமரிப்பில் கொண்டு சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர கருத்துத் தெரிவிக்கையில்,
வடமராட்சி பகுதியில் அண்மைக் காலமாக பல மாடுகள் களவாடப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாடுகளை நீண்ட நாட்கள் பராமரிப்பதில் பொலீஸ் நிலையத்திற்கு கடினம். எனவே உரியவர்கள் தமது மாட்டிற்கான அடையாளத்தை காட்டி பெறுவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.