நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தினரின் முன்மாதிரியான செயற்பாடு
நெல்லியடி வட்ட லயன்ஸ் கழகத்தினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் பெருமளவாக காணப்பட்ட பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை அகற்றும் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தற்போது டெங்கு காய்ச்சலின் நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் முகமாகவும், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாகவும் இச்செயற்பாட்டை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.