துருவு பலகையால் தாக்கியதில் கணவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் துருகுபலகையால் கணவனைத் தாக்கி கொன்றதாக யாழ்ப்பாணம் பொலீஸார் மனைவியைக் கைது செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான துரைராசா செல்வராசா (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர், ஏழாலை பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்து பூம்புகார் வீதியில் வசித்து வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக சில முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் நேற்றிரவு முரண்பாடு முற்றிய நிலையில் மனைவியால் துருவு பலகையால் தாக்கி கணவனைக் கொன்றதாக 25 வயதுடைய மனைவியை பொலீஸார் கைது செய்துள்ளனர்.