மரண அறிவித்தல்
தோற்றம்
3 September, 1928மறைவு
9 January, 2021வேலாயுதம் கந்தசாமி JP (ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர்) (வயது : 92)
நெல்லியடி
லண்டன்
நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கந்தசாமி அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னார் காலஞ்சென்ற செல்லம்மா வேலாயுதம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற சிவசிதம்பரம் பறுவதம் தம்பதிகளின் மருமகனும், தேவசேனாவின் பாசமிகு கணவரும், சியாமளா, குமுதினி, சிவசிதம்பரம், குருபரன், இளவேந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், யோகமூர்த்தி, காலஞ்சென்ற தேவானந்தன் மற்றும் சிவலோஜினி, கலைவாணி, DR. வித்யா ஆகியோரின் அன்பு மாமனாரும், யோகிலோகன், ராஜ்லோகன், கோசலை, அச்சுதன், ஆரணி, அஸ்மிகா, பாலவிநோதன் ஆகியோரின் அன்பு பேரனும், ஓர்பிதா, DR.விக்டோரியா ஆகியோரின் அன்புப் பேரனும், ரயன், ஆர்யா, நைலா, ரபா [RAFA], அலானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும், ஞானேஸ்வரியின் அன்பு சகோதரரும், மாலினி, சுபத்திரா, மாலதி ஆகியோரின் அன்பு மாமனாரும், விமலேஸ்வரி, நகுலேஸ்வரி காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், கனகாம்பிகை ஆகியோரின் உடன் பிறவாத சகோதரரும், தேவராஜன், இளையபத்மநாதன், கதிர்காமத்தம்பி, பாக்கியம் காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரது இறுதிச் சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்