Wed. May 8th, 2024

4 மாணவர்கள் நீரில் மூழ்கியதில் இருவர் சடலமாக மீட்பு

வவுனியா ஈரட்டை பெரிய குளத்தில் இரு மாணவர்கள்  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வவுனியா தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த கவிந்து (வயது 15), கைலாஸ் (வயது 16) என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.
வவுனியா தேக்கவத்தை பகுதியைச்  சேர்ந்த 4 மாணவர்கள் குறித்த குளத்தில் வளர்ப்பு நாயை குளிப்பாட்டி தாமும் குளத்தில் நீராடிய போது, இருவர் நீரில் மூழ்க அவர்களைக் காப்பாற்ற ஏனைய இருவரும் முயன்ற நிலையில்  4 மாணவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர். அதில் இருவர் ஒருவாறு கரைக்கு வந்து உதவி கோரிய போது பொலீஸார், இராணுவத்தினர் மற்றும் அயலவர்களின் தேடுதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்