Sat. Apr 27th, 2024

வவுனியாவில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் கைது

வவுனியா நகரில் விபச்சார நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை வவுனியா பொலிஸார் நேற்று (18) கைது செய்துள்ளனர்.

வவுனியா நகரில் விபச்சாரம் அதிகரித்து வருவதினை அடுத்து, அதனை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது விபச்சாரத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 3 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்திலும் ஆயர்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்