பருத்தித்துறை கடலில் வேண்டுமென்றே இடித்து மூழ்கடிக்கப்பட்ட படகு! கடலில் குதித்த 3 மீனவர்கள்
பருத்தித்துறை கடலில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைப் படகொன்று பருத்தித்துறை மீனவர் ஒருவருடைய படகை வேண்டுமென்றே இடித்து மூழ்கடித்துள்ளது.
படகில் சென்ற 3 மீனவர்களும் கடலில் குதித்து கரையை நோக்கி நீச்சலடித்த போது, சக மீனவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலினால் 18 இலட்சம் ரூபா தனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக, உயிர்தப்பிய மீனவர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.