ரயி்ல், மினிபஸ் விபத்து ஒருவர் பலி
கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், அரியாலையில் புங்கங்குளம் ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள பாதுகாப்பற்ற கடவையை கடந்த மினிபஸ்சுடன் விபத்துக்குள்ளானதில் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று(01) நண்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் அரியாலை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் சுரேந்தர் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
ரயில் பேருந்தை மோதிதள்ளியதில் பேருந்து அருகில் உள்ள காணியின் மதிலை உடைத்து தொங்கி நின்றது.
மேலும் ரயிலின் இயந்திர பகுதியில் சேதம் ஏற்பட்டதால் மற்றொரு Locomotive M4 இன்ஜின் கொண்டுவரப்பட்டு இழுத்து செல்லப்பட்டது.