Sun. May 12th, 2024

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படவேண்டியவா்!

இலங்கையின் முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக கைது செய்யவேண்டும். என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளா் வீரகுமார திஸாநாயக்க கூறியுள்ளாா்.

கொழும்பில் நெற்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில்,

மத்திய வங்கி கொள்ளைத் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவும் கைது செய்யப்பட வேண்டும் என்பதே எமது எண்ணமாகும். அது மாத்திரமின்றி இந்த மோசடிகளுடன்

வேறு எவராவது பங்குக் கொண்டுள்ளாரா?, இதன்போது மோசடி செய்யப்பட்டுள்ள பணத்திற்கு என்ன நடந்துள்ளது? இந்த சொத்துகளை மீளப் பெறுவது எவ்வாறு

என்பது தொடர்பாகவும் ஆராய்ந்துப் பார்த்து, மோசடிச் செய்யப்பட்ட சொத்துக்களை மீளம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த மோசடிகள் தொடர்பான தடயவியல் அறிக்கை,

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை என்பன வெளியிடப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று பலரும் தெரிவித்து வந்தனர்.

இவற்றை ஆதாரமாக கொண்டு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான தண்டனைகளை பெற்றுக் கொடுக்குமாறும்

சட்டமா திணைக்களத்திற்கு தெரிவித்துக் கொள்கின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்