யா/அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா
யா/அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நாளை 07.11.2019 வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக யாழ் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, சிறப்பு விருந்தினராக அப்போஸ்தலர் கார்மேல் சபையின் உதவித் தலைவரும் உதவி மாகாண தலைவியுமான அருட்சகோதரி தெரேசா ராணி , கெளரவ விருந்தினராக வடமாகாண கல்வி திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வினோதன் தனோசிஜா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்னர்.