Sat. May 4th, 2024

யாழ் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவி சடலமாக மீட்பு

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த இந்த மாணவி மல்லாகம் பகுதியில் தனது சகோதரியுடன் வாடகை வீடொன்றில் குடியிருந்துள்ளார் . இவர், யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டில் கற்று வந்துள்ளார். இந்த நிலையில் இவர் நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கிளிநொச்சியிலிருந்து நேற்று மாலையே இவர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டின் உரிமையாளரரே இவரை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்