Sat. Apr 27th, 2024

யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை இரத்ததானம்.

யாழ்ப்பாணம் கேகேபி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் தற்போதைய இரத்த தான தேவையை கருத்தில் கொண்டு வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள லொயலாஸ் மண்டபத்தில் இரத்த தான முகாம் நிகழ்வு இடம்பெற உள்ளது. இவ் இரத்ததான முகாமில் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்க முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட காலத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் வரும் சந்தர்ப்பத்தில் குருதி கொடையாளர்கள் இரத்த வங்கி பதிவு புத்தகத்தை வீதி பாஸ் அனுமதியாக பயன்படுத்த முடியும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தூரஇடங்களை சேர்ந்த குருதி கொடையாளர்கள் 0776616484 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு போக்குவரத்து வசதியை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்