Fri. May 10th, 2024

முழு வெறியில் இராணுவ அதிகாரிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது

தென்மராட்சி கொடிகாமம் படைத்தலைமையக இடண்டாவது கட்டளை அதிகாரிக்கு நிறைவெறியில் வந்த இரு இளைஞர்கள் கடும் சீன் காட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (10) மாலை 6.00 மணியளவில் கொடிகாமம் கச்சாய் வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிக்கு முன் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது…
கொடிகமம் படைத் தலைமையகத்திலிருந்து கச்சாய் சந்திவரை இராணுவத்தினர் அன்றாடம் உடற்பயிற்சியின் நிமிர்த்தம் வீதி ஓரங்களில் நடத்தல் மற்றும் ஓடுதல் போன்றவற்றை மேற்கொள்வது வழமையான விடயமாகும்.
இவ்வாறு இன்றையதினம் கொடிகாமம் படைத்தலைமையகத்தின் கட்டளை வழங்கக்கூடிய இரண்டாவது இராணுவ அதிகாரி தனது உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் நிறைவெறியில் வந்த இரு இளைஞர்கள் குறித்த இராணுவக் கட்டளை அதிகாரியின் செயற்பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவருக்கு மோட்டார் சைக்கிளால் இடிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த அதிகாரி இராணுவத்தினரிடமும் பொலிசாரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து சுற்றிவளைத்து அதிரடி வேட்டை நடத்திய போது குறித்த இளைஞர்கள் கச்சாய் பகுதியில் உள்ள காணி ஒன்றிற்குள் மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய இராணுவத்தினர் கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் இருவரும் தென்மராட்சியில் இயங்கும் வாள்வெட்டுக் குழுக்கழுடன் தொடர்பு உள்ளவர்கள் என்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை இரு இளைஞர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தியுள்ளனர் எனவும் தெரியவருகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்