பொலிஸார் இல்லாமல் வெறிச்சோடும் நெல்லியடி பொலிஸ் நிலையம்
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் போலீசார் பற்றாக்குறை உள்ளதாக தெரியவருகிறது. உடுப்பிட்டி தொகுதியில் 52,000 பொதுமக்கள் வாழ்ந்துவரும் நிலையில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் 30 பொலிசார் கடமையில் இருந்த நிலையில் பொறுப்பதிகாரியின் தொந்தரவு தாங்காமல் போலீஸ் பொறுப்பதிகாரிக்கு தெரியாமலே இடமாற்றம் பெற்றுச் செல்கின்றார்கள். நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் முறைப்பாடு பதிவு செய்யும் காரியாலயத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்ய சென்றால் அங்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். காரியாலயம் வெறிச்சோடி காணப்படுகின்றது. தமிழ் போலீசார் பற்றாக்குறை மற்றும் பொலிஸார் இல்லாததால் பதிவு செய்யச் செல்லும் பொதுமக்கள் திரும்பி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 11.03.2020 இன்று காலையிலிருந்து முறைப்பாட்டு காரியம் போலீசார் இல்லாமலே காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.