மீண்டும் சம்பியனாகியது தொண்டைமானாறு கலையரசி
அரச தலைவர் கிண்ணத்திற்கான 23 வயதிற்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் மீண்டும் தொண்டைமானாறு கலையரசி அணி சம்பியனாகியது.
டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற ஜனாதிபதி வெற்றி கிண்ணத்திற்கான யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான இறுதியாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை புத்தூர் கலைமதி விளையாட்டு கழக மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணியை எதிர்த்து புத்தூர் வளர்மதி அணி மோதியது.
5 செற்கள் கொண்ட போட்டியில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். ஆனால் பலத்த போராட்டத்தில் தொண்டைமானாறு கலையரசி அணி 25:22, 28:26, 30:28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 3:0 வெற்றி பெற்றுச் வெற்றி சம்பியனாகியது.
யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கம் ஏற்கனவே இப்போட்டியை நடாத்திய சம்பியன் வழங்கிய போதும் வயது கணிக்கப்பட்டதில் தவறுகள் ஏற்பட்டதையடுத்து மீண்டும் போட்டி நடாத்தப்பட்டது. இதிலும் தொண்டைமானாறு கலையரசி தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.