ஆளுநர் வருகைக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த வீராங்கனைகள் மற்றும் நடுவர்கள்
ஆளுநர் வருகைக்காக இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த வீராங்கனைகள் மற்றும் நடுவர்கள் ஏமாந்த சம்பவம் யாழ்ப்பாணம் ஆவரங்காலில் இடம்பெற்றுள்ளது
வடமாகாண ஆளுநர் வெற்றிக் கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் இன்று சனிக்கிழமை ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலய மைதானத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப் போட்டிகள் காலை 9 மணிக்கு ஆரம்பமாகவிருந்த போதும் தற்போது 11 மணிக்கு மேலாகியும் போட்டிகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. இதேநேரம் வீரர்களை ஏற்பாட்டாளர்கள் அடிக்கடி தமது கொடிக் கம்பத்திற்கு அருகாமையில் வருகை தருமாறு அடிக்கடி அழைத்து பின்னர் ஏமாற்றத்துடனும் மீண்டும் திரும்பினர்.