Tue. May 7th, 2024

பூசகர் திடீர் மரணம்

கொற்றாவத்தைப் பகுதியில் கோயில் பூசகர் ஒருவர் திடீரென்று இறந்துள்ளார்.  இச்சம்பவம் சற்று முன்னர் கொற்றாவத்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.  கொற்றாவத்தைப் பகுதியைச் சேர்ந்த பரஞ்ஜோதி குகன் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார்.  இவர் கொற்றாவத்தைப் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இரவு வேளையில் பூசை செய்து வந்துள்ளார். இதேபோல் இன்றும் பூசை செய்த போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார்.  மயங்கி விழுந்தவரை அயலில் உள்ளவர்களால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இதில் குறித்த பூசகர் மாரடைப்பால் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகளின் படி , அவர் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்றும், ஆலயங்களில் விளக்கேத்தி வழிபடுவபர் என்று தெரியவந்துள்ளதுடன் , அவர் ஒரு பூசகர் இல்லை என்றும் தெரியவந்துள்ளது ..

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்