Thu. May 9th, 2024

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் நடத்தும் யாழ் மாவட்ட பி பிரிவு அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டி

புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் தமது 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான பி பிரிவு அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டியில் மல்லாகம் நியூவோறியஸ் அணி,  அச்சுவேலி விக்னேஸ்வரா அணிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்று திங்கட்கிழமை மின்னொளியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் புத்தூர்  சரஸ்வதி அணியை எதிர்த்து மல்லாகம்  நியூவோரியஸ் அணி  மோதியது .முதலாவது செற்றில் மல்லாகம் நியூவோறியஸ் அணி 25:19 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது செற்றில் புத்தூர் சரஸ்வதி அணி 25:21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தனர். ஆனால் மூன்றாவது செற்றில் மீண்டும் பலத்த போராட்டத்தில்  மல்லாகம் நியூவோரியஸ் அணி 25:23 என்ற புள்ளிகள் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
அடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் சிறுப்பிட்டி கலைஒளி அணியை எதிர்த்து அச்சுவேலி விக்னேஸ்வரா அணி மோதியது. ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய அச்சுவேலி விக்னேஸ்வரா அணி 25:23, 25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்