Sat. Apr 27th, 2024

படகு கவிழ்ந்ததில் இந்திய மீனவரைக் காணவில்லை

படகு மோதியதில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் இருவரைக் கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் படகு ஒன்று காரைநகர் கோவலம் கடற்பரப்பிற்குள் உள் நுழைந்த சமயம் அதனை கடற்படையினர் விரட்ட முற்பட்டபோது விபத்திற்குள்ளானது.

இதன் போது படகில் இருந்த மூவர் கடலுக்குள் விழுந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இந்தியாவின் கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த ராஜ்கீரன் என்னும் மீனவரே காணாமல் போயுள்ளார்.

கடற்படையினரின் படகு மோதியதில் இந்திய மீனவர்களின் படகு கடலில் மூழ்கியுள்ளது. இவ்வாறு மூழ்கிய படகில் ராஜ்கீரன், சுகந்தன், சேவியர் ஆகியோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களில் சுகந்தன், சேவியர் ஆகிய
மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றி காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதேநேரம் காணாமல்போன ராஜ்கீரனை இரவிரவாக இன்று அதிகாலைவரை தேடுதலில் ஈடுபட்டபோதும் மீட்கப்படாதமையினால் உயிராபத்து நிகழ்ந்திருக்குமா என்ற அச்சம் தமிழகத்தில் நிலவுகின்றது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்