Sun. May 12th, 2024

தேசிய மட்ட பளுதூக்கல் ஜெ.சுகன்யா வெள்ளி பதக்கம் 

திறந்த வயதுப் பிரிவினருக்கான தேசிய மட்ட பெண்களிற்கான பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ.சுகன்யா வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

தேசிய மட்ட திறந்த வயதுப் பிரிவினருக்கான பெண்களிற்கான பளுதூக்கல் போட்டிகள் கொழும்பு டொறின்ரன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற 87 கிலோ நிறைப் பிரிவினருக்கான பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஜெ. சுகன்யா சினெச் முறையில் 65 கிலோ பளுவையும், கிளின் அன் ஜக் முறையில் 75 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 140 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப்  பதக்கத்தையும் கைப்பற்றினர். இவர் யாழ் பாசையூர் புனித அந்தோணியார் பெண்கள் வித்தியாலய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்