ஏக ஆதிக்கத்தில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய அணி சம்பியன்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சங்கம் நடாத்தும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
இதன் இறுதியாட்டம் இன்று வியாழக்கிழமை வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய அணியை எதிர்த்து கல்மடு மகா வித்தியாலய ஆசிரியர் அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய வவுனியா சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலய அணி 18:4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சங்கத்தின் தலைவர் அ.அமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வவுனியா மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் நா.கமலதாசன், சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட பூப்பந்தாட்ட பயிற்றுநர் த.கமலன், கெளரவ விருந்தினராக எஸ்.ஜெ.ஆர். கட்டுமான நிறுவனம் பணிப்பாளர் சி.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.