Sun. May 12th, 2024

ஆர்த்திகனின் அதிரடி ஆட்டத்தால்  முன்னேறியது கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி

கொடுக்கிளாய் சக்திவேல் விளையாட்டு கழகம்  நடாத்தும் வடமாகாண அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட தொடரில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
குறித்த கழக மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து வத்திராயன் உதயசூரியன் அணி மோதியது.
முதல் பாதியாட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் ஆர்த்திகனின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் உதயசூரியன் அணியினர் திணறினர். 6வது மற்றும் 13வது நிமிடங்களில் ஆர்த்திகன் இரு கோல்களை போட கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தனர்.
இரண்டாவது பாதியாட்டத்திலும் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியின் ஆதிக்கம் மேலோங்கி காணப்பட்டது. கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர்கள் 8வது நிமிடத்தில் சுஜாஸ் மற்றும் 11வது நிமிடத்தில் வர்மன் ஆகியோர் ஒவ்வொரு கோல்களை போட ஆட்ட நேர முடிவில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆட்ட நாயகனாக கொற்றாவத்தை றேஞ்சஸ் அணி வீரர் ஆர்த்திகன் தெரிவு செய்யப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்