Wed. May 8th, 2024

தேசிய மட்ட தட்டெறிதலில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவனுக்கு வெண்கலம்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட தடகள போட்டியில் யாழ்மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் ஜெ.விஸ்ணுப்பிரியன் வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நடாத்தப்பட்ட 34வது தேசிய மட்ட தடகள போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ்மாவட்ட இளைஞர் சேவை மன்றத்தை பிரதிநிதித்துவம் செய்த நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் ஜெ.விஸ்ணுப்பிரியன் 39.06 மீற்றர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்