Fri. May 10th, 2024

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! -வடக்கு நோக்கி பயணமாகும் ரணில்-

நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தமாத நடுப்பகுதியளவில் வட மாகாணத்திற்கான விஜயனம் ஒன்றினை மேற்கொள்ள உள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கள நிலவரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதமரின் விஜயம் வடக்கு நோக்கியதாக அமைந்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் பிரதமரின் வடக்கு விஜயம் அமையக்கூடும் என்றும் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடமாகாண அபிவிருத்தி அமைச்சினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது ஆராய உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்