அதிகாலையில் நடந்த கோர விபத்து 6 பேர் உயிரிழப்பு, 53 பேர் படுகாயம்..
களுத்துறை வடக்கு வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இதில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றுமே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு உள்ளன.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் பயணித்த தனியார் பேருந்துடன் மோதி
விபத்துக்குளானதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.