Fri. May 10th, 2024

சுழிபுரம் விக்டோரியா கல்லூரி வொலிபோலில் வெற்றிக் கிண்ணங்களை வழித்துத் துடைத்தது

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்களுக்கான வொலிபோல் போட்டியில் அனைத்து வயதுப் பிரிவிலும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டங்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
16வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர்.
இருப்பினும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியினரின் நுட்பமான ஆட்டத்தில் 25:21, 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை நடேஸ்வராக் கல்லூரி அணி பெற்றது.
18 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான இறுதியாட்டத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலய அணி மோதியது. இதில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி 25:19, 25:12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை இணுவில் மத்திய கல்லூரி அணி பெற்றுக் கொண்டது.
20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான இறுதியாட்டத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது. இதில் ஏக ஆதிக்கம் செலுத்திய சுழிபுரம் விக்டோரியா கல்லூரி அணி 25:19, 25:14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலய அணி பெற்றுக் கொண்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்