Sat. May 11th, 2024

சுண்டுக்குழியில் 8ஏ எடுத்த மாணவி தீமூட்டி உயிரிழிப்பு

யாழ் கல்வி வலயத்திற்குட்பட்ட சுண்டுக்குழி மாணவி ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதயில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பாசையூர் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சுண்டுக்குழி மகளிர் கல்லூரி கல்லூரியில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 8 ஏ எடுத்த மாணவியான லிசியஸ் மேரி சாணுஜா (வயது 19) என்பவரே
இவ்வாறான முடிவெடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த மாணவி தற்போது உயிரியல் பிரிவில் உயர்தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.
கடந்த 12ம் திகதி குறித்த மாணவி தனது சகோதரியின் ஆடையை அணிந்துள்ளார்.இதனை குடும்பத்தில் உள்ளோர் கண்டித்ததால் தனக்குத்தானே தீமூட்டிய நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 16ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்