Fri. May 10th, 2024

கொழும்பில் பரபரப்பு: கோட்டாவின் வழக்கு விசாரணை ஆரம்பம்!! -பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்-

மஹிந்த தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் இரட்டை குடியுரிமை சர்ச்சை குறித்த வழக்கு விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இவ்வழக்கு விசாரணைகளை அடுத்து நீதிமன்றத்திற்குச் செல்லும் இரு வீதிகளும் மூடப்பட்டு, அங்கு படையினர் குவிக்கப்பட் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோத்தபாயவுக்கு எதிராக தீர்ப்பு வருமாயின் அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்