ஜனாதிபதி தேர்தலுக்கான முன்டியடிப்பு!! -இதுவரை 17 பேர் கட்டுப்பணம் செலுத்தினர்-
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரையில் 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்கள ஊடக நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.