கொழும்பில் ஓர் இரவில் 2 விபச்சார விடுதிகள் சுற்றி வளைப்பு!! -6 பெண்கள் கைது-
கிரிபத்கொட மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் 2 விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மஹர மற்றும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இருந்து பெற்றுக்கொண்ட சோதனை உத்தரவுக்கமைய குறித்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டது.
இச் சுற்றிவளைப்பின் போது மஹர பகுத விபச்சார விடுதியில் முகாமையாளரான பெண் ஒருவர் உட்பட, பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கருதப்பப்டும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு , பதவிய மற்றும் கிதெல்கொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 22, 26 மற்றும் 35 வயதானவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதி விபச்சார விடுதியில் 3 பெண்களை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் களனி, கடவத்த மற்றும் மதுரங்குளி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 26, 32 மற்றும் 40 வயதானவர்களாவர்.