கிராம அலுவலகத்தில் பச்சைப் பாம்பு
கரவெட்டி வடக்கு கிராம அலுவலகத்தில் சுமார் 10 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை கரவெட்டி வடக்கு ஜெ/364 கிராம அலுவலகத்திலேயே நடைபெற்றது.
தற்போது மழை காலமாகையால் புற்றுக்குள் இருக்கும் பாம்புகளின் நடமாட்டம் தரையில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கிராம அலுவலகத்தில் பச்சைப் பாம்பு நின்றதைப் பலரும் பார்வையிட்டு அலுவலகத்தில் இருந்து அகற்றியுள்ளனர்.