Sat. Apr 27th, 2024

கபடியில் கிண்ணங்களை வழித்துத் துடைத்தது சென்தோமஸ்

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்கள் பெண்களிற்கான கபடிப் போட்டியில் பருத்தித்துறை சென்தோமஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் நேற்று  செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் அணியை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணி மோதியது.
இதில் இரு அணிகளும் தமது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் பருத்தித்துறை சென்தோமஸ் அணி 34:26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.
பெண்களுக்கான இறுதியாட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் அணியை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணி மோதியது. இதில் பருத்தித்துறை சென்தோமஸ் அணி வீராங்கனைகளின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணியினர் திணறினர். இதனால் ஆட்ட நேர முடிவில் பருத்தித்துறை சென்தோமஸ் அணி வீராங்கனை 50:12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்