கடலில் மிதந்துவந்த வெளிநாட்டவரின் சடலம்!! -அடையாளம் தெரியவில்லை என்று பொலிஸார் தகவல்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை கடலில் நபர் ஒருவலின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் 45 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நபரின் உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.