ஐ.தே.கட்சியுடன் உடன்பாடு இல்லையேல் தொலைபேசியே எமது சின்னம்!
நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடா்பாக ஐ.தே.கட்சியுடன் இணைக்கப்பாடு உண்டாக வேண்டும். இல்லையேல் தொலைபேசி சின்னத்திலேயே போட்டியிடுவோம்.
மேற்கண்டவாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை முன்னிட்டு 8 பேர் அடங்கிய வேட்புமனுக் குழுவை
அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நேற்றைய செயற்குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம்
தமது தரப்புக்கு அறியப்படுத்தப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினம் வேட்புமனுக் குழு கூடி
அது தொடர்பான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.