Sun. May 12th, 2024

கிளிநொச்சி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை முடக்கம்!! -ஆளும் அரசியல் வாதியின் செயலால் பெற்றோர் அதிர்ப்தி-

ஆளும் கட்சி அரசியல் வாதியினி தலையீட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிபா் இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் தடைப்படும் அபாயம் எழுந்திருப்பதாக பெற்றோரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள 12 கல்வி வலயத்திலும் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த இடமாற்றத்தின் கீழ் கிளிநொச்சியில் 17 அதிபர்கள் அவர்களது இணக்கத்துடன் இடமாற்றம் செய் யப்பட்டிருந்தனா்.

இந்நிலையில் 11 வலயங்களில் இடம்பெற்ற இடமாற்றத்தை அரசியல்வாதி ஒருவா் தடுத்து நிறுத்தியிருக்கின்றாா்.

இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது தொடர்பில் இடமாற்றப்பட்ட அதிபர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த அரசியல்வாதியின் செல்வாக்குள்ள சர்ச்சைக்குரிய ஒரு அதிபர் தற்போது

தரம் 3 ல் உள்ளார் அவரை 1 ஏ.பி பாடசாலைக்கு நியமிக்கும் நோக்கிலேயே இதனைத் தடுக்கின்றார்.

குறித்த அதிபர் ஏற்கனவே இதே பாடசாலையில் இருந்த சமயம் பல மோசடிகள் , தவறான நடத்தைகள் காரணமாக கட்டாய இடமாற்றத்திற்கு உட்பட்டவர்

எனவும் சுட்டிக்காட்டுகின்றனர். குறித்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது , எமது வலயத்தில் இடமாற்றப்பட்ட 17 அதிபர்களும் விரும்பிய பாடசாலைகள் அவர்களின் தரத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது.

அதில் எந்த முரண்பாடும் கிடையாது. ஆனால் எந்தவொரு காரணமும் தெரிவிக்காது இடமாற்றத்தை நிறுத்துமாறு செயலாளர் கூறிய நிலையில் நிர்வாக ரீதியில் நிறுத்தப்பட்டது. இவ்வாறு நிறுத்தப்பட்டதனால் பாரிய நெருக்கடியை எதிர் நோக்க நேரிடும்.

அதேநேரம் அதிபர்கள் கூறும் குற்றச் சாட்டுத் தொடர்பில் நான் கருத்துக்கூற விரும்பவில்லை எனத் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனைத் தொடர்பு போண்டு கேட்டபோது ,

கிளிநொச்சி வலயத்தில் இடமாற்றம் வழங்கப்பட்ட பட்டியலில் மாறுபாடு உள்ளதாக சுட்டிக் காட்டியமையினாலேயே இடைநிறுத்தப்பட்டது.

இருப்பினும் இடமாற்றப்பட்ட அதிபர்கள் இடையே முரண்பாடு இல்லையேல் வழங்கலாம் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்