ரணிலுக்காக எமது கதவுகள் திறந்திருக்கும்!! -சஜித்-
ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் ரணில் விக்கிரமசிங்கவிற்காக எந்த நேரத்திலும் திறந்திருக்கும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எமது கூட்டணியில் இணைந்து வெற்றிப் பயணத்திற்கு வலு சேர்க்குமாறும் சஜித் ரணிக்கான அழைப்பினை விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் உத்தியோகப்பூர்வ தேர்தல் பிரசார தலைமை அலுவலகம் இன்று திங்கட்கிழமை காலை பத்தரமுல்லை – எதுல் கோட்டே பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
அத்துடன் ஐ.தே.கவின் அனுமதியுடனேயே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகவே, இதனை முன்னோக்கி கொண்டு செல்ல தேவையான பலம் எம்மிடத்தில் உள்ளது.
இதை முறியடிக்க எவராலும் முடியாது. ஏனெனில் ஜனநாயக ரீதியான பயணத்திலேயே நாம் ஒன்றிணைந்துள்ளோம்.
அதேவேளை ஏனைய இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் எம்முடன் வந்து இணைந்து கொள்ளலாம். எதற்காகவும் அச்சம் கொள்ளத்தேவையில்லை. எந்த சமயத்திலும் அர்களை பாதுகாக்க நாம் தயாராகவுள்ளோம்.
ஊழல் மோசடி கப்பம் பெறுபவர்களின் வலைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம். தாய்நாட்டை விற்கும் செயற்பாடுகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அவர் கூறினார்.