முகமூடி அணிய கோரிக்கை
30.10.2020 இன்று தொடக்கம் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட புதிய சந்தை பகுதிகளில் உணவுப் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் முகக் கவசம் இல்லாமல் வரவேண்டாம் என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் செயலாளர் அ.வினோத் ராஜ் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றார்.
முகமூடி அணியாமல் வருமிடத்து சந்தை மற்றும் நெல்லியடி பகுதி மூடப்பட வேண்டியநிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.