குறித்த நூல் வெளியீட்டு நிகழ்வில் மன்னார் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர்கள் , திட்டமிடல் பணிப்பாளர் , கணக்காளர் உற்பட மாவட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்ட காலாமன்ற பிரதி நிதிகள் , கிராம அபிவிருத்தி சங்க தலைவர்கள், மாதர் ஒன்றிய பிரதி நிதிகள், பல் துறை சார் கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
அதன் பின்னர் இடம் பெற்ற கலைஞர் ஒன்று கூடலின் போது 2020 ஆம் ஆண்டுக்கான புதிய கலாச்சார பேரவை அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ள காலச்சார விழாவில் வெளியிடப்படவுள்ள மலர் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
அதே நேரத்தில் இவ்வருடம் இடம்பெற உள்ள கலாச்சார நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.