பிரபல கொள்ளைக்காரன் கைது! பெருமளவு பொருட்கள் மீட்பு.
பல கொள்ளை சம்பவங்களுடன் தொடா்புடைய நபா் ஒருவரை மேல் மாகாண குற்ற புலனாய்வு பிாிவினா் கைது செய்திருக்கின்றனா்.
குறித்த சந்தேக நபர் மஹபாகே, பேலியகொடை, கிரிபத்கொடை, கடான ஆகிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் சென்று கொள்ளையடித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரிடமிருந்த 5 தங்க மோதிரங்கள், இரண்டு வளையல்கள், 3 காதணிகள், 10 கைப்பேசிகள், 6 மடிக்கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் கேமரா ஒன்றையும்
காவல்துறையினர் இதன்போது பறிமுதல் செய்துள்ளனர்.இதற்கு மேலதிகமாக குறித்த நபரிடமிருந்து 2.300 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும்
காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.