தேசிய மட்ட பளுதூக்கலால் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்து மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்
தேசிய மட்ட பளுதூக்கலால்
வரலாற்றுச் சாதனையை பதிவு செய்து மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் மீசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி தமது சாதனையை பதிவு செய்தனர்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கும் போட்டி இன்று பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் பெண்களிற்கான 45 கிலோ எடைப் பிரிவில் மீசாலை விக்னேஸ்வர மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த செய்த ஜெ.ஜாதவி சினெச் முறையில் 37 கிலோ பளுவையும் கிளின் அன் ஜக் முறையில் 45 கிலோ பளுவையும் ஒட்டுமொத்தமாக 82 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
பாடசாலை வரலாற்றில் தேசிய மட்டத்தில் பெற்றுக் கொண்ட சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.